Published : 20 Sep 2018 08:44 AM
Last Updated : 20 Sep 2018 08:44 AM

காங்கிரஸ் தலைவர்கள் மீது தடியடி

சத்தீஸ்கரில் முதல்வர் ரமண் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் அமர் அகர்வால். இவர் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ``60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவோம்'' என்றார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியை, அமைச்சர் அமர் அகர்வால் குப்பை என்று பேசியதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் பிலாஸ்பூரிலுள்ள அமர் அகர்வால் வீட்டுக்கு நேற்று காலை சென்ற காங்கிரஸ் தலைவர்கள், போலீஸாரையும் மீறி குப்பையை வீசி எறிந்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பிலாஸ்பூர் கூடுதல் போலீஸ் எஸ்.பி. நீரஜ் சந்திராக்கர் கூறும்போது, ``போலீஸாரையும் மீறி காங்கிரஸ் தொண்டர்கள் அமைச்சரின் வீட்டுக்குள் குப்பையை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து காங்கிரஸார் மீது போலீஸாரைத் தாக்கியது, கலவரம் நடத்த முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் காங்கிரஸ் பவனிலுள்ள காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்யச் சென்றபோது போலீஸாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x