Published : 26 Sep 2018 08:06 AM
Last Updated : 26 Sep 2018 08:06 AM

ராணுவ வீரர்களை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்: ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகளை அவமதித்த அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டுக்காக சேவை செய்துள்ள ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள், உயிர்நீத்த போர் விமான பைலட்களின் குடும்பத்தி னர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பணிபுரிந்தவர்கள் ஆகிய உங்கள் ஒவ்வொருவரின் வலியையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை அவமதித்த மற்றும் உங்களிடம் திருடிய அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவோம்” என பதிவிட்டுள் ளார்.

அமேதியில் ராகுல் செய்தி யாளர்களிடம் கூறும்போது:

‘‘ரபேல் விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இதேபோல விஜய் மல்லையா விவகாரத்தில் தொடர்புடைய நபர்களும் அடை யாளம் காட்டப்படுவார்கள். மக்க ளின் முன்பு உண்மைகள் எடுத் துரைக்கப்படும். இனிமேல் அவர் களே தீர்ப்பளிப்பார்கள்’’ என்றார்.

ராணுவத்துக்கான ரபேல் ரக போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள பிரான்சின் தஸ்ஸோ நிறுவனம், தனது கூட்டாளி நிறுவனமாக மத்திய அரசின் எச்ஏஎல்-ஐ தேர்வு செய்யாமல் அனுபவம் இல்லாத அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்தது பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்.

நேற்று முன்தினம் தனது மக்களவை தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், ஜெய்ஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, “நாட்டின் காவலாளியாக விளங்குபவர் (பிரதமர்) ஏழைகள், நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாக்கெட்டிலிருந்து ரூ.20 ஆயிரம் கோடியை பறித்து, தொழிலதிபர் அனில் அம்பானியின் பாக்கெட்டில் போட்டுள்ளார்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மறுப்பு

காங்கிரஸ் ஆட்சியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தம், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்போது ரபேல் போர் விமான டெண்டர் கடந்த 2007-ல் வெளியிடப்பட்டது. 2012 டிசம்பர் 12-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டது. கடந்த 2014 மார்ச் 13-ம் தேதி பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்-க்கு ஒப்பந் தம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x