Published : 02 Sep 2018 12:26 AM
Last Updated : 02 Sep 2018 12:26 AM

சமண மதத் துறவி தருண் சாகர் காலமானார்: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சமண மதத் துறவியான தருண் சாகர் மஹாராஜ் (51), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சாகர் மஹாராஜ். இவரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின். சமண மதம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமது 13-வது வயதிலேயே துறவுக் கோலம் பூண்டார். இதையடுத்து, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் சமண மதக் கோட்பாடுகளையும், நல்லொழுக்கங்களையும் போதித்தார்.

தருண் சாகரின் போதனையால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இவரது சீடர்களாக மாறினர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தருண் சாகர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x