Published : 20 Sep 2018 08:56 AM
Last Updated : 20 Sep 2018 08:56 AM
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் முக்கிய தகவல் களை பகிர்ந்து கொண்டதாக பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) வீரர் ஒருவரை உ.பி. தீவிர வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.
இது தொடர்பாக உ.பி. காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங் நேற்று லக்னோவில் கூறியதாவது:
ம.பி.யின் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் அச்சுதானந்த மிஸ்ரா. இவர் கடந்த 2006-ல் பிஎஸ்எப்-ல் சேர்ந்தார். பாதுகாப்பு தகவல்களுக் கான நிருபர் என்று கூறிக்கொண்ட பெண் ஒருவருடன் கடந்த 2016-ல் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஆசை வார்த்தைகள் கூறி இப்பெண் விரித்த வலையில் சிக் கிய மிஸ்ரா அவரிடம் படைப்பிரிவு கள் செயல்படும் விதம், போலீஸ் அகாடமி, பயிற்சிக் கல்லூரி தொடர்பான விவரங்களை பகிர்ந்துகொண்டார். பிறகு படைப்பிரிவு தங்கியுள்ள இடம், ஆயுதங்கள் தொடர்பான விவரம் மற்றும் பிஎஸ்எப் முகாம்களின் புகைப்படங்களை அளித்துள்ளார்.
தொலைபேசி எண்
பாகிஸ்தான் தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் முக்கியத் தகவல்களை மிஸ்ரா பகிர்ந்துகொள்ளத் தொடங் கினார். பாகிஸ்தான் நண்பர் என இந்த எண்ணை மிஸ்ரா தனது போனில் பதிவு செய்துள்ளார்.
நொய்டாவில் 2 நாட்களாக மிஸ்ராவிடம் ஏடிஎஸ் மற்றும் பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அலுவல் ரகசியம் காக்கும் சட்டத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு டிஜிபி ஓ.பி.சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT