Published : 12 Sep 2018 02:23 PM
Last Updated : 12 Sep 2018 02:23 PM
பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை செப்டம்பர் -17ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் ஏற்பட்ட கலவரம், பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இடதுசாரி ஆதரவாளர் கள் கவிஞர் வரவர ராவ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத னிடையே இடதுசாரி ஆதரவாளர் கள் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா ஆகியோரது கைதை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தனர்.
இந்த வழக்கில் மகாராஷ்டிரா போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மகாராஷ்டிர போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘‘மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், இடது சாரி ஆர்வலர்கள் 5 பேருக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங் களான லேப்-டாப்கள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் போன்றவை எங்களிடம் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரோமிலா தாப்பர் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் கால அவகாசம் அளிக்குமாறு கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகள், வரவர ராவ் உள்ளிட்டோரின் வீட்டுக்காவலை செப்டம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT