Published : 26 Sep 2018 07:35 AM
Last Updated : 26 Sep 2018 07:35 AM

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு,  முதல்வர் பழனிசாமி திருப்பதியில் தரிசனம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தார். அவரை ஆந்திர அமைச்சர் அமர்நாத் ரெட்டி, சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், இரவு திருமலையில் தங்கிய வெங்கய்ய நாயுடு, நேற்று காலை சாமானிய பக்தர்கள் செல்லும் வைகுண்டம் க்யூ வரிசை மூலம் ஏழுமலையானை தனது குடும்பத்தாருடன் சென்று தரிசனம் செய்தார்.

பின்னர், ரங்கநாயக மண்டபத் தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, பட்டு வஸ்திரம், தீர்த்த பிரசாதங்கள், புத்தாண்டு காலண்டர்கள், டைரிகள் வழங்கி கவுரவிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து, அவர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் சிறு வயது முதலே திருப்பதி ஏழுமலையானை சாமானிய பக்தனை போல்தான் வரிசையில் சென்று தரிசிப்பேன். என்னால், மற்ற பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு விடக்கூடாது. நான் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவானதால், ஏழு மலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தேன். மேலும், சுவாமியிடம், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டேன்’’ என்றார்.

இதேபோல, தமிழக முதல்வர் பழனிசாமியும் நேற்று ஏழுமலை யானை தரிசனம் செய்தார். முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர், திருமலைக்கு வந்திருந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பிறகு, திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இரவு திருமலையில் தங்கினார். நேற்று காலை, விஐபி பிரேக் தரிசன சமயத்தில் ஏழுமலையானை முதல் வர் பழனிசாமி தரிசனம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x