Last Updated : 24 Sep, 2018 11:41 AM

 

Published : 24 Sep 2018 11:41 AM
Last Updated : 24 Sep 2018 11:41 AM

பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை: நெல், பருத்தி சேதமானதால் விவசாயிகள் வேதனை

கடந்த மூன்று நாட்களாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகரில் பெய்துவரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெல், பருத்தி ஆகியவை சேதமடைந்துள்ளன.

பஞ்சாபில் சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளுக்கும் ஹரியாணாவின் யமுனை நதிக்கும் திங்கட்கிழமை அன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை அன்று அமிர்தசரஸில் 145 மி.மீ. மழை பெய்தது. கனமழையால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டன.

பஞ்சாபில் நவான்சாகர் மாவட்டத்தில் மழையால் கூரை இடிந்ததில் 2 பேர் பலியாகினர். இடைவிடாத மழையால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 11 டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது.

இரு மாவட்ட விவசாயிகளும் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அறுவடை சமயத்தில் மழை பெய்துள்ளதால், விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என்று வேதனை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x