Published : 10 Sep 2018 10:11 AM
Last Updated : 10 Sep 2018 10:11 AM

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவர், கொள்கை இல்லை: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவரும் இல்லை, கொள்கை யும் இல்லை என பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சித்தார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில பாஜக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் 2-வது மற்றும் இறுதி நாளான நேற்று, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலுக் கான வியூகங்களை அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. வரும் 2022-ல் புதிய இந்தியாவை கட்டமைப்பது என்ற கட்சியின் கொள்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் நிறைவாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி னார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ‘வீழ்த்த முடியாத இந்தியா, அடல் பாஜக’ என்ற முழக்கத்துடன் வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறைகூவல் விடுத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு குடும்பத்தினரின் 48 ஆண்டு கால ஆட்சியையும் இப்போதைய 48 மாத ஆட்சியையும் ஒப்பிட வேண்டும் என மோடி வலியுறுத்தி னார். கொள்கை ரீதியாக முரண் பாடு கொண்ட கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரள முயல்கிறார்கள். அவர்களுக்கு தலைவரும் இல்லை கொள்கை யும் இல்லை. இந்த மெகா கூட்டணிக்கான தலைவராக காங்கிரஸ் தலைவரை ஏற்க சிறிய கட்சிகள் கூட தயங்குகின்றன. இது தான் நமது மிகப்பெரிய சாதனை என மோடி குறிப்பிட்டார். எதிர்க் கட்சிகளின் மெகா கூட்டணி என்பது கேலிக்கூத்தானது என்று பிரதமர் சாடினார். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஏராள மான வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்டுள்ளது. முந்தைய ஆட்சி யின்போது தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. இப்போது இதுபோன்ற தாக்குதல்கள் நிறுத்தப் பட்டுள்ளன. 2022-ல் தீவிரவாதம், சாதியவாதம், மதவாதம் ஆகிய வற்றிலிருந்து நாடு விடுபடும்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்த போதிலும், அவர் இன்னமும் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக விளங்கு கிறார். அவருக்கு 70 சதவீதத் துக்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவு உள்ளது. வரும் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், 2014 தேர்தலில் பெற்றதைவிட பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x