Published : 18 Sep 2018 09:04 AM
Last Updated : 18 Sep 2018 09:04 AM
பீமா கோரேகான் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்களின் வீட்டுக் காவலை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பீமா கோரேகான் கலவர வழக்கில் இடதுசாரி ஆதரவாளர் கள் கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கிலிருந்து 5 பேரையும் விடுவிக்கக் வேண்டும், கைது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர் தாப்பர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது 5 பேரின் வீட்டுக் காவலையும் நீட்டிக்க உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும் இடதுசாரி ஆதரவாளர்களின் கைது தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT