Published : 20 Sep 2018 09:03 AM
Last Updated : 20 Sep 2018 09:03 AM
அசாமில் என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) வரைவுப் பட்டியலில் விடுபட்ட அனைவரிடம் இருந்தும் விண்ணப்பம் மற்றும் ஆட்சேபங்களை பதிவுசெய்யும் நடைமுறைகளைப் மீண்டும் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் இந்த ஆண்டு ஜூலையில் வெளியான என்ஆர்சி இறுதி வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.எப்.நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “என்ஆர்சி- யில் விடுபட்ட அனைவரிடமிருந் தும் பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டும். வரும் 25-ம் தேதி முதல் 60 நாட்களுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் பிரச்சினை யின் வீரியம் கருதி குடி மக்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படும் ஓரே மாநிலம் அசாம் ஆகும். வங்க தேசத்தில் இருந்து குடியேறுபவர்களால் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க இது பராமரிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT