Published : 17 Sep 2018 09:33 AM
Last Updated : 17 Sep 2018 09:33 AM
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல் கலைக்கழகத்தில் கடந்த 14-ம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணிக்கும், ஏபிவிபிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
சில பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த சாய் பாலாஜி தலைவராகவும், சரிகா சவுத்ரி துணைத் தலைவராகவும், அஜாஸ் அகமது ராத்தர் பொதுச்செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT