Published : 20 Sep 2018 05:17 PM
Last Updated : 20 Sep 2018 05:17 PM

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகார்: பிஷப் பிராங்கோ பதவி நீக்கம்- வாடிகன் அதிரடி அறிவிப்பு

 கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ மூலக்கலை தற்காலிமாக பதவி நீக்கம் செய்து கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.

மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகினார். பின்னர் அவர் கேரள போலீஸார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 2வது நாளாக இன்றும் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கத்தோலிக்க தலைமையகமான வாடிகனுக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து வாடிகன் விசாரணை தொடங்கி நடத்தி வருகிறது. இதனிடையே பாலியல் புகாருக்கு ஆளான பிராங்கோ தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக வாடிகன் இன்று அறிவித்துள்ளது. கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு டெல்லியில் இதனை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x