Published : 17 Sep 2018 09:22 AM
Last Updated : 17 Sep 2018 09:22 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று காலை, தேவி, பூதேவி சமேதராய், மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து எழுந்தருளி, 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்த கோஷமிட்டவாறு பெருமாளை தரிசித்தனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று இரவு 7 மணிக்கு கருடசேவை நடக்கிறது. திருமலையில் கருட சேவை தொடங்கி, 12 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். கருட சேவையை காண நேற்று மாலை முதலே பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT