Published : 12 Sep 2018 11:46 AM
Last Updated : 12 Sep 2018 11:46 AM

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: முக்கிய கட்சிகள் புறக்கணிப்பதால் ஒத்தி வைக்க திட்டம்?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை பாது காக்க நடவடிக்கை எடுக்காவிட் டால், உள்ளாட்சித் தேர்தலை புறக் கணிக்கப் போவதாக முக்கிய அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 1954-ம் ஆண்டு 35-ஏ பிரிவு சேர்க்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்குவதுடன் பிற மாநில மக்கள் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க தடை விதிக்கிறது. இந்தப் பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுபோலவே மெஹபூபா முப்தி தலைமையிலான தேசிய மாநாட்டுக்கட்சியும் காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

காஷ்மீரின் முக்கிய இருகட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை புறகணிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x