Published : 07 Sep 2018 02:54 PM
Last Updated : 07 Sep 2018 02:54 PM
கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சக பயணிகள் புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ம் தேதியன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மானசரோவர் சென்றார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கைலாஷ் பயண அனுபவத்தை பதிவிட்டார். அதில், கைலாஷ் சென்ற ஒருவரிடம் கேட்டால், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை, அழகிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார். நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஏரியின் தண்ணீர், சுத்தமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கிறது. யார் வேண்டுமானாலும் தண்ணீரை எடுத்து பருகலாம். இங்கு வெறுப்பில்லை. இதனால் தான், இந்தியாவில் நாம் இதனை வணங்குகிறோம்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் கைலாஷ் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் செல்லும் சக பயணிகள், ஆர்வத்துடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆன்மிக பயணம் மேற்கொள்ளும்போது, காங்கிரஸ் தலைவருடன் புகைப்படம் எடுக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து அவர்கள் மகிழச்சியை வெளிப்படுத்தினர். சாதாரண பயணிகளுடன் சேர்ந்து ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் அனுபவம் மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT