Last Updated : 01 Sep, 2018 04:13 PM

 

Published : 01 Sep 2018 04:13 PM
Last Updated : 01 Sep 2018 04:13 PM

ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து: 28 பேர் காயம்

 ராஜஸ்தானில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பள்ளி பேருந்தில் சென்ற  சிறுவர், சிறுமியர்கள் 28 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தின் தலைமை போலீஸ் அதிகாரி கூறும்போது, "ராஜஸ்தானின் உள்ள சராய் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5 முதல் 15 வயதுக்குட்டப்பட்ட கிருஷ்ணா பள்ளியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த பள்ளி பேருந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 28 பேர் காயமடைந்தனர்.இதனைத் தொடர்ந்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டுள்ளனர்” என்றார்.

மேலும் பேருந்து ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x