Published : 03 Sep 2018 04:38 PM
Last Updated : 03 Sep 2018 04:38 PM
'மனைவியின் கையில் சிக்கித் துன்பப்படும் ஆண்களின்' நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக ஆண்கள் ஆணையமும் அமைக்க வேண்டும் என்று மக்களவை எம்.பி. ஹரிநாராயன் ராஜ்பார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ-க்கு இன்று அவர் அளித்த பேட்டி:
பெண்களுக்கு தேசிய சட்ட ஆணையம் உள்ளதுபோல் ஆண்களுக்கும் தேசிய சட்ட ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் இதன்மூலம் தங்கள் பிரச்சினைகளைப் பேச ஒரு இடம் கிடைக்கும். மனைவிமார்களின் கைகளில் சிக்கி சீரழியும் ஆண்களை நாம் தற்போது நாம் பார்த்து வருகிறோம். எனவே யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, ஆண்களுக்காக இந்தக் கோரிக்கையை முன்வைத்தபோது நாடு முழுவதும் ஆண்களின் ஆதரவைப் பெற்றேன்.
இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 5000க்கும் மேற்பட்ட ஆதரவு செய்திகள் எனக்கு வந்து குவிந்தன. ஆண்களுக்கும் ஒரு சட்ட ஆணையம் அமைக்க வேண்டுமென்ற எனது யோசனைக்கு வெளிநாடுகளிலிருந்தும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு மக்களவை எம்.பி.ஹரிநாராயன் ராஜ்பார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT