Last Updated : 09 Sep, 2018 04:17 PM

 

Published : 09 Sep 2018 04:17 PM
Last Updated : 09 Sep 2018 04:17 PM

தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடமே தங்கச் செயின் பறிப்பு: அதிர்ச்சியில் மயக்கமானார்

இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் தடகள போட்டியின் ஹெப்டத்லான் பிரிவில் மேற்கு வங்க வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இவரது தாயார் பசானா பர்மன்.

தனது மகள் தங்க பதக்கம் வென்ற காட்சியை பரவசத்துடன் பசானா காணும் வீடியோ வைரலானது. இந்த நிலையில் நேற்று பசானாவுக்கு துயர சம்பவம் நேரிட்டுள்ளது.

சந்தைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தபடி பசானா நேற்றிரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை 2 இருசக்கார வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் பசானாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய பிறகு அதிர்ச்சியில் உறைந்த பசானா பின் மயங்கி விட்டார்.

இந்த தகவல் அறிந்ததும், கிராமவாசிகள் பசானாவின் வீட்டின் முன் கூடி விட்டனர். அவர்களாக முன்வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேட தொடங்கினர். பசானாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x