Published : 05 Sep 2018 11:52 AM
Last Updated : 05 Sep 2018 11:52 AM

சோபியா கைது: நாட்டில் ஒரே குரல்தான் ஒலிக்க வேண்டுமா?- காங்கிரஸ் தாக்கு

நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டுமா என்று ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணித்தார். அப்போது அவரின் பின்னால் அமர்ந்திருந்த சோபியா என்ற பெண் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார்.

இது குறித்து தமிழிசை அளித்த புகாரில் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

சோபியா கைது செய்யப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சருமான மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களா? இதைத்தான் இந்தியா விரும்புகிறதா? 2019-க்கான போராட்டம் என்பது பாஜகவின் பாசிசம் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x