Published : 19 Jun 2019 02:36 PM
Last Updated : 19 Jun 2019 02:36 PM
குஜராத்தில் தெருவில் நடந்து செல்பவர்களை காளை மாடு ஒன்று விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தெருவில் அநாதையாக கைவிடப்பட்ட காளை மாடு ஒன்று தெருவில் நடந்து செல்வர்களை ஆவேசமாக முட்டியது. அந்த வழியாக நேற்று நடந்து சென்ற பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையம் முட்டித்தள்ளியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
காளை முட்டியதில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் அந்த காளையை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசாலையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT