Published : 27 Jun 2019 08:56 PM
Last Updated : 27 Jun 2019 08:56 PM
ரயில்நிலை நடைமேடையில் இருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டவர் ரயிலில் வந்தபோது சிக்கினார். எனினும் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அசங்காவன் ரயில் நிலைத்தில் பயணி ஒருவர் நடைமேடை ஒன்றில் இருந்து அடுத்த நடைமேடைக்கு தாவி குதித்து கடந்து செல்ல முற்பட்டார். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் வந்ததை கவனிக்காமல் கீழே குதித்தபோது அதிவேகமாக அந்த தண்டவாளத்தில் ரயில் வந்தது.
இதனால் நடைமேடையில் நின்று கொண்டிருந்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிருஷ்டவசமாக அவர் நடைமேடையையொட்டி தண்டவாள பகுதியில் ஒதுங்கி தப்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரயில் சென்ற பிறகு அந்த பகுதிக்கு ஓடி வந்த சக பயணிகள் அவர் உயிருடன் தப்பித்ததை பார்த்த பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் தனது அடுத்த சில நொடிகளில் மீண்டும் அவர் தண்டவாளத்தை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT