Last Updated : 21 Jun, 2019 08:09 AM

 

Published : 21 Jun 2019 08:09 AM
Last Updated : 21 Jun 2019 08:09 AM

அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து: சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்குப் பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சார் பில், மக்களவை மற்றும் மாநிலங் களவையைச் சேர்ந்த சுமார் 750 எம்.பி.க்களுக்கு நேற்றிரவு விருந்தளிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதில் பங்கேற்க வேண் டும் என்று எம்.பி.க்களுக்கு நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச் சகம் அழைப்பு விடுத்தது.

அதன்படி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கப் பட்டது. இந்த விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டன. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் சிலர் பங் கேற்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க் கள், இந்த விருந்தில் பங்கேற்க வில்லை.

இந்த விருந்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங் கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், திமுக எம்.பி. கனி மொழி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ் சய் சிங், பாஜக.வில் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் உட் பட பலர் பங்கேற்றனர்.

இந்த விருந்தில் பிரதமர் மோடி யுடன் எம்.பி.க்கள் உரையாடினர். பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர் என்று பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x