Published : 25 Sep 2014 10:29 AM
Last Updated : 25 Sep 2014 10:29 AM

சாரதா சீட்டு ஊழல் திரிணமூல் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை

சாராதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுபேந்து அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசா ரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேர விசா ரணைக்குப் பிறகு வெளியில் வந்த சுபேந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய தண்டனைச் சட்டம் 160-ன் கீழ் சாட்சியம் அளிப்பதற்காக என்னை அழைத்திருந்தனர்” என்றார்.

இதே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் போஸிடமும் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது.

இதன் மூலம் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர்.

இதுதவிர திரிணமூல் கட்சியி லிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டுள்ள குணால் கோஷ் சாரதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x