டெல்லியில் 118 டிகிரி வெயில்: கேரளா எக்ஸ்பிரஸில் கோவை திரும்பிய 4 பேர் பலி

டெல்லியில் 118 டிகிரி வெயில்: கேரளா எக்ஸ்பிரஸில் கோவை திரும்பிய 4 பேர் பலி
Updated on
1 min read

டெல்லியில் நேற்று இதுவரை இல்லாத அளவு 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்த 4 பேர் ஜான்சியில் உயிரிழந்தனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. டெல்லியில் நேற்று அதிகபட்சம் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதுபோலவே உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.

பெரும்பாலான வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்தநிலையில், 68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் கோவையில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 4 பேர் பலியாகினர். அவர்கள் அனைவரும் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தவர்கள். கடுமையான வெயில் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது.

உயிரிழந்தவர்கள், பச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகியோர் என தெரியவந்துள்ளது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in