Published : 20 Jun 2019 11:04 AM
Last Updated : 20 Jun 2019 11:04 AM

மாநிலங்களவை இன்று கூடுகிறது: கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடும் நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாகப் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து புதிய மக்களவை திங்களன்று கூடியது.

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கோட்டா தொகுதி பாஜக எம்.பி. ஓம் பிர்லா சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட் டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய் வறிக்கையும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x