Last Updated : 23 Jun, 2019 04:26 PM

 

Published : 23 Jun 2019 04:26 PM
Last Updated : 23 Jun 2019 04:26 PM

டெல்லியில் ரயில் பெட்டிகளுக்குள் சிசிடிவி கேமராக்கள்: 48 மணிநேரத்தில் 2 திருடர்கள் சிக்கினர்

டெல்லியில் ரயில்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு ரயில் பெட்டிகளுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் நாளுக்கு நாள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனை அடுத்து கேமரா பொருத்தப்பட்ட 48 மணிநேரத்தில் 2 திருடர்கள் சிக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

''கடந்த வாரம் கல்கா சதாப்தி ரயிலில் சி-4 பெட்டியில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரிடம் விலையுர்ந்த செல்போன் திருடுபோய்விட்டது.

டெல்லி ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண்.1க்கு ரயில் வந்து நின்ற பிறகு இத்திருட்டு நடந்ததால் ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் தலைமையின்கீழ் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா பதிவுகளை அலசி ஆராய்ந்ததில் சி-4 பெட்டியில் இத்திருட்டுச் சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் நம்பகமான ஆதாரங்களுடன் மிகவும் சரியாகப் பொருந்தியது.

கிடைத்துள்ள இன்னொரு நம்பகமான தகவலின்படி இக்குழுவும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ரூ.59 ஆயிரம் மதிப்புள்ள எஸ்-9 வகை செல்போன்களும் அதனுடன் ஆறு உயர் வகை செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம்''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x