Published : 14 Jun 2019 12:37 PM
Last Updated : 14 Jun 2019 12:37 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள அவந்திபோரா மாவட்டத்தில் உள்ள பிரா பந்தியனா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்த ராணுவம், துணை ராணுவம், மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது, ராணுவத்தினரை நோக்கி, தீவிரவாதிகள் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்டநேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளிடம் இருந்து எந்திரத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், தோட்டாக்கள், கைதுப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT