Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM
ரயில்வே துறையில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு இந்தூர் தொகுதி பாஜக எம்.பி. சங்கர் லால்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் மிகவும் அபத்தமான ஒன்று. பெண்களுக்கு எதிரே இவ்வாறு மசாஜ் செய்துகொள்வது நமது இந்திய கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் ஏற்புடையதா? ரயில் பயணிகளின் அவசர தேவைக்காக மருத்துவர்களை நியமிப்பதும், மருத்துவ உதவிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது ஆகும். ஆனால், இதுபோன்ற தரம் தாழ்ந்த திட்டங்கள் அவசியமற்றது என நான் கருதுகிறேன்.
மேலும், இத்திட்டத்துக்கு பெண்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் சங்கர் லால்வானி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT