கர்நாடகாவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; நால்வர் படுகாயம்

கர்நாடகாவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; நால்வர் படுகாயம்
Updated on
1 min read

கர்நாடகாவில் வீடொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை கலபுர்கி பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:

கர்நாடாகாவின் கலபுர்கி பகுதியில் மங்கல்கி கிராமம் உள்ளது. இங்கு அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் 7 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் மீது இடிபாடுகள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in