Published : 07 Jun 2019 11:19 AM
Last Updated : 07 Jun 2019 11:19 AM
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் வாஜ்பாய் வசித்த அரசு பங்களாவில் விரைவில் குடியேறவுள்ளார்.
டெல்லியில், கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில், வாஜ்பாய், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2004-ம் ஆண்டு ஆட்சியை இழந்ததும், டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் குடியேறினார்.
பிரதமர் பதவி வகித்தபோது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் குடியிருந்த அவர் பின்னர் புதிய பங்களாவுக்கு மாறும் சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர் இறக்கும் வரை, குடும்பத்தினருடன் அங்கு வசித்தார். 14 ஆண்டுகள் அந்த பங்களாவில் அவர் குடியிருந்தார்.
வாஜ்பாய் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பங்களாவை காலி செய்தனர். பின்னர் அந்த பங்களாக காலியாகவே இருந்தது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவர் அமித் ஷா, அண்மையில் அந்த பங்களாவுக்கு சென்று பார்த்துள்ளார். பங்களாவில் சில மாற்றங்கள் செய்யவும் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து விரைவில் அந்த பங்களாவில் அவர் குடும்பத்துடன் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT