Published : 10 Jun 2019 09:58 AM
Last Updated : 10 Jun 2019 09:58 AM

திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார்

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று மாலை நாடு திரும்பினார். அவர் டெல்லி செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்தார்.

பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் திருப்பதி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார். பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வெங்கடாசலபதியை தரிசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x