Published : 03 Jun 2019 11:31 AM
Last Updated : 03 Jun 2019 11:31 AM

குஜராத்தில் 114 டிகிரி வெயில்; அனலில் சிக்கி 2 பேர் பலி: 300 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

குஜராத் மாநிலத்தில் பல பகுதிகளில் 114 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இங்கு நேற்று கடும் வெயிலில் மயக்கமடைந்து 2 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. டெல்லியில் அதிகபட்சம் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதுபோலவே குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.

பெரும்பாலான வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும், 114 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், சூரத், பரூச் உட்பட பல நகரங்களில் நேற்று 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சபர்ஹந்த் மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களில் கடும் அனலில் சிக்கி நேற்று இருவர் உயிரிழந்தனர். கடும் வெப்பத்தில் உடலில்  போதிய தண்ணீர் இல்லாமல் 300க்கும் மேற்பட்டோர் மயமக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்கள் இதுபோன்ற வெப்பநிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குஜராத் மாநில அரசு எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x