Published : 25 Sep 2014 01:29 PM
Last Updated : 25 Sep 2014 01:29 PM
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார். 26-ம் தேதி ஐ.நா. பொதுஅவையில் உரை, அமெரிக்க அதிபருடனான சந்திப்பு என முக்கிய நிகழ்வுகள் அவரது பயணத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்கு முன்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இது அவருடனான எனது முதல் சந்திப்பு" என அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT