Published : 12 Jun 2019 08:21 AM
Last Updated : 12 Jun 2019 08:21 AM
நாடாளுமன்றத்தில் புதிதாக முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்வது குறித்து மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்கிறது.
முஸ்லிம் ஆண்கள், 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய் யும் நடைமுறை சட்டவிரோத மானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் வகையில் கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா' நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை படி மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகும் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை.
இதைத் தொடர்ந்து முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து அடுத்தடுத்து 2 முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த முத்தலாக் தடை சட்டத்தின் படி முத்தலாக் கூறும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். முத்த லாக் கூறி விவகாரத்து செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டாலும் விசா ரணை தொடங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கணவர் மாஜிஸ் திரேட்டை அணுகி ஜாமீன் கோர லாம். 16-வது மக்களவையின் பதவிக் காலம் முடிவடைந்ததால் அவசர சட்டம் காலாவதியானது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தில் புதிதாக முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை மசாதோ தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT