Published : 16 Jun 2019 12:31 PM
Last Updated : 16 Jun 2019 12:31 PM
பிஹாரில் கொளுத்தும் வெயில் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் சுருண்டுவிழுந்து 45 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக அவுரங்காபாத், கயா, நவாடா, பாட்னா ஆகிய மாவட்டங்களில் நேற்று வெயில் 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் சுருண்டு விழுந்து பலியானார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுரங்காபாத் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேந்திர பிரசாத் சிங் கூறுகையில், " மாவட்டத்தில் கொளுத்தும் கடுமையான வெயில் காரணமாக, சனிக்கிழமை இரவு வரை 27 பேர் இறந்துள்ளார்கள், பல்வேறு மருத்துவமனைகளில், 20-க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக சன் ஸ்ட்ரோக்கால் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
கயா மாவட்ட கலெக்டர் அபிஷேக்சிங் கூறுகையில் " கயா மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் வெயிலின் ஹீட் ஸ்ட்ரோக் தாங்கமுடியாமல் 14 பேர் இறந்துள்ளார்கள். நாவாடா மாவட்டத்தில் 5 பேர் பலியானார்கள். இரு மாவட்டங்களிலும் சேர்த்து 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் " எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிஹார் மாநிலத்தில் வெயிலின் தாக்கத்துக்கு 45 பேர் பலியாகியுள்ளனர்.
வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ குமார் அறிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் மேலும அதிகரிக்கும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு பகல்நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT