

பிரதமர் மோடியைப் புகழ்ந்த கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
கேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி(52). இவர் கடந்த 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் 2 முறை எம்.பி.யாக இருந்தார்.
கடந்த மாதம் 28-ம்தேதி அப்துல்லா குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார். இதனால் அப்துல்லா குட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த சூழலில் டெல்லிக்கு சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்கள் அப்துல்லா குட்டியை பாஜகவில் இணையுமாறு கோரினர்.
இதைத்தொடர்ந்து அப்துல்லா குட்டி இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார். டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.