பெண் புகைப்பட நிருபர் பலாத்கார வழக்கு: 3 பேர் குற்றவாளிகள்

பெண் புகைப்பட நிருபர் பலாத்கார வழக்கு: 3 பேர் குற்றவாளிகள்
Updated on
1 min read

மும்பை சக்தி மில்ஸ் வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற புகைப்பட பெண் நிருபர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் குற்றவாளிகள் என செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

தண்டனை விவரம் வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் ஜாதவ், (19), காசி்ம் பெங்காலி (21), முகம்மது சலீம் அன்சாரி (28), ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 376(இ) பிரிவின் கீழ் (திரும்பவும் பலாத்கார குற்றம் புரிதல்) குற்றம் இழைத்துள்ளவர்கள் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி அறிவித்தார்.

சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்த மூவரை யும் குற்றவாளிகள் என ஏற்கெனவே அறிவித்து அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

டெல்லியில் 2012-ல் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக் குப் பிறகு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(இ) திருத்தப்பட்டு அது அமலுக்கு வந்தது. இந்த பிரிவு அதிகபட்சமாக மரண தண்டனைக்கு வகை செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in