Published : 12 Apr 2014 12:00 AM
Last Updated : 12 Apr 2014 12:00 AM

பணியாளர்களை தாக்கியோரை கைது செய்ய உத்தரவு

மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியாளர்களைத் தாக்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்யுமாறு மாநில காவல் துறை தலைவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பைக் பேரணி நடத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணை யத்தின் உத்தரவு. ஆனால் மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பைக் பேரணி நடத்தியுள்ளனர்.

அப்போது அதனை வீடியோ எடுத்த தேர்தல் பணியாளர்கள் இருவரையும் அவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பெயர் உள்ள அனைவரையும் கைது செய்யுமாறு மாநில டிஜிபி-க்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி பைக் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்குப் பதிவின் போது மேற்கு வங்கத்தில் வன்முறைகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x