Published : 12 Mar 2018 08:44 AM
Last Updated : 12 Mar 2018 08:44 AM

10 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோல வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுவும் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அண்டை நாடுகளுக்கு இந்தியா முதலிடம் அளித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை, வங்கதேச தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம், கயானா, சோமாலியா, மாலி, ருவாண்டா உட்பட ஒட்டுமொத்தமாக 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x