Published : 07 Mar 2018 04:29 PM
Last Updated : 07 Mar 2018 04:29 PM

போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல்: பதஞ்சலி பாலகிருஷ்ணாவுக்கு இடம் - நிரவ் மோடி இல்லை

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டில் இடம் பெற்றிருந்த நிரவ் மோடியின் பெயர் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை. அதேசமயம் பதஞ்சலி நிறுவனர்களில் ஒருவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,800 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐயிடம் அந்த புகார் தெரிவித்துள்ளது. இதேபோல, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது. நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.

போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நிரவ் மோடியின் பெயர் இடம் பிடித்து இருந்தார். 1.8 பில்லியன் டாலர்கள் (12 ஆயிரம் கோடி ரூபாய்) சொத்துக்களுடன் அவரது பெயர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

இதுபோலேவே பிஸா நிறுவனர் பபா ஜான், தென் ஆப்ரிக்க பெரும் பணக்காரர் கிறிஸ்டோபல், சவுதி அரேபியா இளவரசர் அலாவுதீன் பின் தலால் ஆகியோர் பெயரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.

அதேசமயம், போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான  ஆச்சார்யா பாலகிருஷ்ணா, 6.3 பில்லியன் டாலர்களுடன் (42 ஆயிரம் கோடி ரூபாய்) 274வது இடத்தில் உள்ளார். பதஞ்சலி நிறுவனத்தில் பாலகிருஷ்ணாவிற்கு 98.6 சதவீத அளவிற்கு பங்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x