Last Updated : 16 Mar, 2018 06:49 PM

 

Published : 16 Mar 2018 06:49 PM
Last Updated : 16 Mar 2018 06:49 PM

சந்திராபாபு நாயுடு முடிவுக்கு வரவேற்பு; பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மம்தா அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகிய முடிவை ஆதரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சிலிகுரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா கூறியதாவது:

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கேயுரிய பிரச்சனைகளும் விவகாரங்களும் உள்ளன. தெலுங்கு தேசத்துக்கும் அதற்கேயுரிய பிரச்சனைகள் உள்ளன. முதலில் தேஜகூவுடன் இருந்தனர், தற்போது நல்ல காரணத்துக்காக வெளியேறியுள்ளனர். தெலுங்கு தேசம் எடுத்த முடிவு சரியானதே.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார் மம்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x