Published : 10 Mar 2018 10:30 AM
Last Updated : 10 Mar 2018 10:30 AM
மேற்குவங்க மாநிலத்தில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் ஏப்ரல் 2-ம் தேதி காலியாகின்றன. அந்த இடங்களுக்கு மார்ச் 23-ல் தேர்தல் நடக்கிறது. ஓர் இடத்துக்கு மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வியை காங்கிரஸ் நிறுத்தவுள்ளது. மற்றொரு இடத்துக்கு திரிணமூல் வேட்பாளர் போட்டியிடுவார். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால், திரிணமூல் ஆதரவை கோரியது. அதற்கு திரிணமூல் தலைவரும், முதல்வருமான மம்தா ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் அபிஷேக் சிங்வி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT