Published : 05 Mar 2018 11:05 AM
Last Updated : 05 Mar 2018 11:05 AM

‘தனியாகப் போரிடும் வீரர்’ பஞ்சாப் காங். முதல்வருக்கு மோடி புகழாரம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் ‘தனியாகப் போரிடும் வீரர்’ என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியபோது, “காங்கிரஸ் முதல்வர்கள் அரிதாகி வருகின்றனர். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங், தனியாகப் போரிடும் வீரர்” என்று தெரிவித்தார்.

எந்த கண்ணோட்டத்தில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் என்பது தெரியவில்லை. எனினும் அவரது பாராட்டு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும், கட்சிக் தலைமைக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பாஜக வெளியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி உள்விவகார பூசல்களில் எனக்கோ, கட்சித் தலைமைக்கோ பிரதமர் மோடியின் அறிவுரை தேவையில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் களமிறங்கும். அதற்கு தயார் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x