Published : 26 Mar 2018 10:04 AM
Last Updated : 26 Mar 2018 10:04 AM

பிளாஸ்டிக் பைகளுக்கு மகாராஷ்டிரா தடை

மும்பையில் பேட்டியளித்த மகாராஷ்டிரா சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராமதாஸ் கடாம் கூறுகையில், ‘‘ பிளாஸ்டிக் பயன்பாடு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு கூட மிகப் பெரிய காரணமாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. வணிகர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பைகளை கைவிட ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும். பின்னர், தடையை மீறுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’’என்றார்.

இந்தியாவில் 17 மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. 18-வது மாநிலமாக மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x