Published : 02 Mar 2018 11:42 AM
Last Updated : 02 Mar 2018 11:42 AM

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் 12 நக்சலைட்டுகள் என்கவுன்ட்ட்ரில் சுட்டுக் கொலை

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ஹரி பூஷன் என்ற மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த என்கவுண்ட்டர் புஜாரி கேங்கர் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் நடைபெற்றுள்ளது.

சத்திஸ்கர் மாநில சுக்மா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மீனா தன் அறிக்கையில் என்கவுண்டரை உறுதி செய்தார், ஆனால் பலியானோர் எண்ணிக்கை பற்றி தகவல் அளிக்கவில்லை.

கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோதகுடம் மாவட்டத்தின் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் பாதுகாப்புப் படையினைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் சிறப்பு தலைமை இயக்குநர் அஸ்வதி தெரிவித்துள்ளார்.

அப்பகுதியிலிருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x