Published : 28 Mar 2018 08:24 AM
Last Updated : 28 Mar 2018 08:24 AM

பத்திரிகையாளர் மரண வழக்கு: சிபிஐ விசாரிக்க ம.பி. பரிந்துரை

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் நகரை சேர்ந்தவர் சந்தீப் சர்மா (35). செய்தி சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தவர். இவர் சம்பல் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் - போலீஸ் அதிகாரிகள் இடையிலான கள்ளத் தொடர்பை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில் பிந்த் நகரில் நேற்று முன்தினம் அவர் பிரஸ் கிளப் நோக்கிச் செல்லும்போது, பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இது திட்டமிட்ட கொலை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர்வலியுறுத்தினர். இதை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று பரிந்துரை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x