Last Updated : 09 Mar, 2018 02:49 PM

 

Published : 09 Mar 2018 02:49 PM
Last Updated : 09 Mar 2018 02:49 PM

கார்த்தி சிதம்பரத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து இடைக்கால பாதுகாப்பு: ஜாமீனில் விடுவித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஐஎன்எஸ் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எஸ்.ரவீந்திர பட் அளித்த உத்தரவின் விவரம் வருமாறு:

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான சம்மன் நடவடிக்கையிலிருந்து அவருக்கு இடைக்கால பாதுகாப்பு வழக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு மார்ச் 20 வரை அமலில் இருக்கும்.

மேலும், இவ்வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை அமலாக்கத்துறை அவரை கைது செய்யாது.

கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட சம்மன், பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்ட நடவடிக்கை உத்தரவுகளிலிருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் தொடுத்திருந்த மனுவின்மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் அமலாக்கத்துறைக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறைக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த அனுமதி உத்தரவில் அவசர நிவாரணம் மேற்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றத்திறகு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வுத்தரவுக்குப் பின்னர் அவர் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x