Last Updated : 18 Mar, 2018 07:22 AM

 

Published : 18 Mar 2018 07:22 AM
Last Updated : 18 Mar 2018 07:22 AM

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கு: தீவிரவாதி தாராவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

1995-ல் பஞ்சாபின் அப்போதைய முதல்வர் பியாந்த் சிங் கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதி ஜக்தார் சிங் தாராவுக்கு சண்டிகர் நீதிமன்றம் நேற்று சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

பஞ்சாப் தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி திலவார் சிங் என்ற தீவிரவாதி தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பியாந்த் சிங் மற்றும் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஜக்தார் சிங் தாரா குற்றவாளி என சண்டிகரில் உள்ள விசாரணை நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிலையில் தாராவுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

தாரா, ஜக்தார் சிங் ஹவாரா, பரம்ஜித் சிங் பவுரா ஆகிய 3 பிகேஐ தீவிரவாதிகளும் தேவி சிங் என்ற கொலை குற்றவாளியும் கடந்த 2004-ல் சிறையில் சுரங்கம் தோண்டி தப்பினர். இவர்களில் ஹவாரா, பவுரா ஆகிய 2 தீவிரவாதிகளும் பின்னர் கைது செய்யப்பட்டனர். தாரா 11 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ல் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x