Published : 19 Sep 2014 10:57 AM
Last Updated : 19 Sep 2014 10:57 AM
நைஜீரியாவில் ஆக்கிரமித்து வரும் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளபதியை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
நைஜீரியாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கு இதுவரை நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இயக்கத்தின் முக்கிய நபரும் தலைமை தளபதியுமானவரை நைஜீரிய ராணுவம் கைது செய்ததாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் முக்கிய நகரை கைப்பற்றுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைய தயாரான போது அந்த இயக்கத்தின் தலைமை தளபதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT