Published : 05 Mar 2018 10:01 AM
Last Updated : 05 Mar 2018 10:01 AM

நிர்மலா சீதாராமன் ரஷ்ய பயணத்தில் ரூ.40,000 கோடிக்கு ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாஸ்கோ பயணத்தின்போது ரூ.40,000 கோடி ரஷ்ய ஏவுகணை தடுப்பு அரண் ஒப்பந்தத்தை இறுதி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இந்திய, சீன எல்லை 4,000 கி.மீ. தொலைவு நீளம் கொண்டது. இந்த எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணை தடுப்பு அரண் சாதனத்தை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ரூ.40,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் விலையை நிர்ணயம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

இந்தப் பின்னணியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக விரைவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ செல்கிறார். அவரது பயணத்தின்போது ‘எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணை தடுப்பு அரண் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதே ‘எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணை தடுப்பு அரணை கடந்த 2014-ம் ஆண்டிலேயே ரஷ்யாவிடம் இருந்து சீனா வாங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x